இவர்கள் திருந்துவார்களா?
நேற்று இரவு சுமார் 8 மணிக்கு ஊட்டியிலிருந்து பஸ் மூலம் மேட்டுப்பாளையம் வந்துகொண்டிருந்தேன். குளிர் காற்று நடுங்கவைத்தது. . பஸ்ஸில் நல்ல கூட்டம். சிட்டிங் சீட் இல்லை. ஒரு பெரியவர் சுமார் 50 வயதிருக்கும். டிரைவர் சீட் அருகில் நின்று கொண்டார். பஸ் வளைவில் திரும்பும்போது அவரால் நேராக நிற்க முடியாமல் சாய்ந்து கொண்டே வந்தார். திடீரென்று அவர் என்ஜின் மீது உட்கார்ந்தார். ஒரு வளைவில் நன்றாக அவர் சாய்ந்துவிட்டார். கீழே விழாமல் இருக்க கியர் ராடை பிடித்துக்கொண்டார் . சக பயணிகள் அதிர்ந்து விட்டனர். அவரை சீட்டில் உட்கார சொன்னார்கள். மறுத்துவிட்டார். எவ்வளவு சொல்லியும் கேட்க்காமல் எழுந்திருக்கவில்லை
குன்னூர்வரை அவர் அப்படியேதான் வந்தார். அனைவரும பயந்துகொண்டே வந்தனர்.
தான் செய்வது தவறாக இருந்தாலும் அதை விடாப்பிடியாக திருத்திக்கொள்ள விரும்பாதவர்களால் பிரச்னை அவருக்கு மட்டுமல்ல, மற்றவருக்கும் தான்.
இவர்கள் திருந்துவார்களா?